Sunday 22 May 2011

நாசமாப் போன மழை..!! :-)

ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன்...

சகோதரன் கேட்கிறான் “ஏன் நீ குடை எடுத்துக் கொண்டுப் போகவில்லை?”

சகோதரியின் அறிவுரை “ஏன் மழை விடும் வரை காத்திருக்க வேண்டியதுதானே?”

அப்பா கோபமாக “ சளி, காய்ச்சல் வந்த பிறகுதான் உனக்கு புத்தி வரும்.”..

நண்பன், "மச்சான் இந்த மழைக்கு ஒரு தம் இருந்தா எப்படி இருக்கும்? "

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்......

அம்மா என் தலையை துவட்டிக்கொண்டே............,

 “நாசமாப் போன மழை... என் பிள்ளை வீட்டுக்கு வரும் வரைப் பொறுத்திருக்க கூடாதோ?”....

இதுதாங்க அம்மா.....!!!!!!! :-)

No comments:

Post a Comment